Close
மார்ச் 7, 2026 1:21 மணி

களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே. கம்பன் உள்ளிட்ட 14 துறை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பேசியதாவது;

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அரசு இயந்திரம், அரசின் வளர்ச்சி திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று அடையும் வகையில் இந்த மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி வருகிறோம். இதுவரையில் இந்த மாவட்டத்தில் 40 முகாமிற்கு மேலாக நாங்கள் நடத்தி வருகிறோம். இது திட்டத்தின் போது உன் மூலமாக பொது மக்கள் துரிதமாக சிறப்பாக பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமுக்கு வந்து தங்களுடைய தேவைகளை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பல்வேறு துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நலத்திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜோதி எம்எல்ஏ தலைமை தாங்கி, முகாமினை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் அசோக்குமார், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் நலத்திட்ட உதவிகள் குறித்து மருத்துவ துறை சார்பில் விளக்கப்பட்டது. 15 துறைகள் சார்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை வழங்கி, பெற்றுக்கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் வேளாண்,தோட்டக்கலை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பல்வேறு துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top