நாமக்கல் பகுதியில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மீது நடைபெற்று வரும் தாக்குதலைக் கண்டித்து, விடுதலைக்களம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆகியவற்றை கண்டித்தும், தொடர் அச்சுறுத்தலை கண்டித்தும், இதற்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரியும் விடுதலைக் களம் கட்சி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலைக்களம் கட்சியின் நிறுவனர் நாகராஜன் தலைமை வகித்தார். தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்கள். திரளான தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.




