Close
மார்ச் 7, 2026 2:53 மணி

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்

வல்வில் ஓரி திருவிழா

வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற ஆக. 1 முதல் 3 நாட்களுக்கு, கொல்லிமலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் சார்பில், கொல்லிமலையில் வருகிற ஆக. 1 மற்றும் 2ம் தேதி ஆகிய 2 நாட்கள் வல்வில் ஒரிவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, கொல்லிமலைப் பகுதியில் செயல்பட்டு வரும், அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளை ஆக. 1 முதல் 3ம் தேதி வரை, 3 நாட்கள் மூடிவைக்க வேண்டும்.

கொல்லிமலைப் பகுதியில், செம்மேடு, செங்கரை, சோளக்காடு மற்றும் சேந்தமங்கலம் தாலுகா காரவள்ளி ஆகிய 4 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையினை தவிர்க்கும் வகையில், ஆக. 1 முதல் 3ம் தேதி வரை முழுமையாக மூடவேண்டும்.

மேற்படி நாட்களில் சம்மந்தப்பட்ட கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top