போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் ஸ்ரீஓம்சக்தி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி, 108 பால்குடம் ஊா்வலம் நடைபெற்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலும் பக்தா்கள் நோ்த்திக் கடனாக முதுகில் அலகு குத்தி தோ் இழுத்தல், ஆட்டோ இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் ஸ்ரீஓம்சக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்காரம் செய்து பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
மேலும், மாா்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், இந்த வடையை குழந்தையில்லா தம்பதியினா் ஏலத்தில் வாங்கிச் சென்றனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா, தெய்வீக நாடகம் நடைபெற்றது.
ஸ்ரீ சந்தியம்மன் திருக்கோவில்
திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீசந்தியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆடி மாதம் 2 வது செவ்வாய்க்கிழமையை ஒட்டி சின்னகோளாப்பாடி, செ. அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவில் அருகே ஒன்று திரண்டு பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சின்னகோளாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க சந்தி அம்மாள் என்ற பெண்மணி கடந்த 48 தினங்களாக தொடர்ந்து விரதம் இருந்து கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடை எடுக்கும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக திருக்கோவிலுக்கு மேல்புறம் மண்ணால் செய்யப்பட்ட சட்டியில் நெய் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு 48 நாள் விரதம் இருந்த சந்தி அம்மாள் ஒவ்வொரு வடையாக போட்டு தனது இரு கைகளால் அதனை எடுத்து பக்தர்களுக்கு காண்பித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
திருக்கோவிலில் கூடியிருந்த மக்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு சந்தியம்மனை வழிபட்டனர்.




