Close
மார்ச் 7, 2026 4:57 மணி

அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

அரசுத்துறை செயல்பாடுகள் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான தீபக் ஜேக்கப் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முன்னிலையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் எஸ்டாலின் திட்ட முகாம் நடத்துவது குறித்தும், தற்போது வரை நடத்தப்பட்ட முகாம்கள் குறித்தும், இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

உங்களுடன் ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்களில் தேவையான அளவிலான குடிநீர், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக் கழிவு மேலாண்மை பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டர்.

வருவாய்த் துறை சாா்பில் இணையவழி சான்றிதழ்கள் வழங்குவதில் நிலுவையில் உள்ளவை குறித்து வட்டம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட கூடாது என வட்டாட்சியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், இணையவழி பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனுக்களின் நிலுவை குறித்து ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை வனகராய பாளைய தெருவில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top