புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற 4 -ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்க போட்டியில் இப்பள்ளியின் யுகேஜி மழலையர் வகுப்பு மாணவி பா. துலாசினி இரண்டாம் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சதுரங்கப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மழலை மாணவி பா. துலாசினிக்கு பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.




