Close
மார்ச் 7, 2026 3:17 மணி

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற கூட்டு துணை பதிவாளர்களுக்கு பாராட்டு விழா

ஓய்வுபெற்ற கூட்டுறவு துணைப்பதிவாளர்களுக்கு, மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, உத்தரவுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செங்கோடு கூட்டுறவு அர்பன் பேங்க் மேலாண்மை இயக்குனர் மற்றும் துணைப்பதிவாளர் பாலசுப்ரமணியன், பள்ளிபாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் செல்வகுமார் ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா, மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து, துணைப்பதிவாளர்கள் பாலசுப்ரமணியன் மற்றும் செல்வகுமார் ஆகியோருக்கு பணி ஓய்வு உத்தரவுகளை வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில், நாமக்கல் சரக துணைப்பதிவாளர் ஜேசுதாஸ், திருச்செங்கோடு சரக துணைப் பதிவாளர் கிருஷ்ணன், துணைப் பதிவாளர்கள் செல்வி, இந்திரா, பால் ஜோசப், கூட்டுறவு சார்பதிவாளர்கள் பிரகாஷ், அமுதா, ராஜேஸ்வரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top