Close
மார்ச் 7, 2026 1:25 மணி

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்த 6,272 பேர் கைது

கோப்புப்படம்

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக, கடந்த 7 மாதங்களில் 6,272 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 1.84 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு மாதம்தோறும் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் உணவுப்பொருட்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த அத்தியாவசியப் பொருட்களை சிலர் முறைகேடாக வாங்கி அவற்றை கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதைத்தடுக்கும் வகையில், தமிழக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர், அதற்கு உடந்தையாக செயல்படுவோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், தொடர்ந்து ரேஷன் பொருட்கள் பதுக்கலில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

நாமக்கல் மாவடத்தில், கடந்த 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை மூலம், ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் மீது, மொத்தம் 6,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 2,342 டன் ரேஷன் அரிசி, 13,720 லிட்டர் மண்ணெண்ணெய், 1,725 சமையல் கேஸ் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 1.84,41,328 ஆகும். இது தொடர்பாக 6,272 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 1,362 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. மேலும் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 2,880 வாகனங்கள் அபராதத் தொகை செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டுள்ளன.

கள்ளச்சந்தைத் தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத் தின் கீழ் 70 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். பொது விநியோகப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர் பான புகார் அளிக்க 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top