நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, மாவட்ட கூட்டுறவ மேலாண்மை பயிற்சி நிலைலயத்தில், 2025-26ம் ஆண்டுக்கான டிப்ளமோ பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதையொட்டி பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி வகுப்புகளை துவக்கி வைத்தார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கி கூட்டுறவு பயிற்சி குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி, துணைப்பதிவாளர் இந்திரா. துணை முதல்வர் காயத்ரி, விரிவுரையாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், விவேகானந்தர், சிவசுப்பிரமணி, சுப்ரமணியன்,மாவட்ட கூட்டுறவு யூனியன் மேலாண்மை இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




