Close
மார்ச் 7, 2026 2:51 மணி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு

பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலை செங்கம் வட்டம் பெரியகோளப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி முன்னிலையில்   மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள். திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் முகாம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் முகாமானது நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியர் தொடந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி செங்கம் வட்டம், பெரியகோளப்பாடி ஊராட்சியில் பெரியகோளாப்பாடி, பெரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 1472 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு புதிய குடும்ப அட்டைகளும், புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளும் பட்டா மாற்றத்திற்கான சான்றிதழ்களும் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்களும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கி அரசின் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என்றும் , உங்களுடன் ஸ்டாலின் முகாமை அனைவரும் பயன்படுத்தி கொண்டு கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்து உள்நாட்டு மீண் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செங்கம் வட்டம் மேல்பென்னத்தூர் ஊராட்சி சங்கிலியுரி ஓடை ஏரியில் மாவட்ட ஆட்சியரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை தாங்கி 44 ஆயிரம் எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகளை இருப்பு செய்தார்கள்.

மேலும் செங்கம் நகராட்சி விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உயர்தர மருத்துவ சேவைகள் முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பிரகாஷ், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மீன்வளத் துறையினர்மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top