Close
மார்ச் 7, 2026 6:04 மணி

சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது.

11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சரவணனிடம் பட்டுச் சேலையை வழங்கி முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

இக்கண்காட்சியில் திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நவீன வடிவமைப்புகளை கொண்ட கண்கவர் கைத்தறி இரகங்களான புவிசார் குறியீடு பெற்ற ஆரணி பட்டு சேலைகள், காஞ்சி காட்டன் சேலை இரகங்கள், 60×60 டை சேலை ரகங்கள், லுங்கிகள் மற்றும் துண்டுகள் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கைத்தறி இாகங்களுக்கும் 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட பட்டு ஜவுளி இரகங்களுக்கு 35 சதவீதம், 65 சதவீதம் மற்றும் ரூ.500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.

இக்கண்காட்சியில் நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 20 நெசவாளர்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது.

நெசவாளா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு  ரூ. 12 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகள் வழக்கப்பட்டன. மேலும், பல ஆண்டுகளாக நெசவுப் பணியில் ஈடுபட்டு வரும் நெசவாளா்களுக்கு அவா்களது சேவையை கௌரவிக்கும் வகையில் அவா்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

கண்காட்சியில் திருவண்ணமலை சரக உதவி இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட நிா்வாக அலுவலா்கள் மற்றும் துறை அலுவலா்கள், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்கள் மற்றும் நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top