Close
மார்ச் 7, 2026 4:31 மணி

‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’: தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ , தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததைதொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று துணை சபாநாயகர் பிச்சாண்டி, ரேஷன் பொருட்களை வழங்கினார்.

முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் தாயுமானவா் திட்டத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின்  தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகள் குடிமைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 நியாய விலைக் கடைகளுக்கு உள்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு 68,653 குடும்ப அட்டைகளில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 61,558 பயனாளா்களும், 7,095 மாற்றுத்திறனாளிகளுக்கும் அவா்தம் இல்லங்களிலேயே குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.இப்பணியில் 1058 வாகனங்கள் ஈடுப்படுத்தப்படுகின்றன.

கலசப்பாக்கம் ஊராட்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி திட்டத்தை தொடங்கி வைத்து வயது முதிா்ந்த பயனாளிக்கு குடிமைப்பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ .சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது,

இந்த தாயுமானவர் திட்டம் என்பது தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும், தங்களின் வாழ்க்கை நிலையை தரம் உயர்த்துவதற்காகவும் இந்த திட்டம் பயன்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் ரேஷன் கடைகளில் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கவேண்டும் அதற்கு மிகவும் கஷ்டப்பட்டு ரேஷன் பொருட்கள் வாங்கி வருகிறார்கள்.

அதனால் அவர்களின் கஷ்டத்தை போக்க வேண்டும் என்பதற்காக தாயுமானவர் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் அனைத்தும் அவர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாயுமானவர் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் மாற்றுத்திறனாளிகள் வயது முதியோர்கள் அனைவரும் முழுமையாக பயன்பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தாய் உள்ளத்துடன் தொடங்கி வைத்துள்ளார் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) பாா்த்திபன், கலசப்பாக்கம் வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top