Close
ஏப்ரல் 23, 2026 10:02 மணி

புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக  தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம்

புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம் மகாராணி ரோட்டரி சங்க தலைவர் செல்வி துரைமணி தலைமையில் மாவட்ட நூலகத்தில் நடைபெற்றது.

சங்க தலைவர் செல்வி துரைமணி நூலகத்திற்கு வருகை தந்த வாசகர்களுக்கும், இளைஞர்களுக்கும் மேலும் சிறப்பாக பணியாற்றும் நூலகர் குமுதா, நூலகர் மாலதி, மாவட்ட நூலகர் கண்ணன்  உள்ளிட்டவர்களுக்கு  பொன்னாடைஅணிவித்து  பாராட்டி புத்தகத்தின் சிறப்புகளை பற்றி  எடுத்துரைத்தார்

நிகழ்வில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கருணை செல்வி ரவிக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் செந்தாமரை பாலு, நூலகர் குமுதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

நிகழ்வில்   செல்லமுத்து, தீபா, புஷ்பலதா, பாண்டியம்மாள், மசுமதி, வளர்மதி, சந்திரகலா  மற்றும் வாசகர்கள்  உட்பட பலர்  கலந்து கொண்டனர்

முன்னதாக செயலாளர் சுதர்சினி கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்  நிறைவாக   கருணை செல்வி நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top