Close
மார்ச் 7, 2026 1:31 மணி

நாமக்கல்லுக்கு மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் ரூ. 30 லட்சம் ரொக்கப்பரிசு

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், மாநில அளவில் சிறந்த, 2வது மாநகராட்சிக்கான விருதினை நாமக்கல் மாநகர மேயர் காலநிதி, கமிஷனர் சிவகுமார் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பெற்றுக்கொண்டனர்.

நாமக்கல் மாநகராட்சிக்கு மாநில அளவில், 2வது சிறந்து மாநகராட்சிக்கான விருது மற்றும் ரூ. 30 லட்சம் ரொக்கப்பரிசினை, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் மொத்தம் 24 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிப் பகுதிகளில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து அதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் தலைமையில், அலுவலர்கள் கொண்ட குழுவினர், கடந்த 26.7.2025 அன்று, நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அவர்கள் வழங்கிய அறிக்கை மற்றும் தரப்புள்ளிகளின் அடிப்படையில், தமிழகத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் ஸடாலின், நாமக்கல் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் ரொக்கப்பரிசாக ரூ. 30 லட்சம் வழங்கி பாராட்டினார்.

மாநகராட்சி மேயர் கலாநிதி, கமிஷனர் சிவகுமார் ஆகியோர் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top