நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், 79 வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. வங்கியின் சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவுக்கு தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சந்தானம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் சண்முகம், பால் வளத்துறை துணைப்பதிவாளர்கள் ஜோசப், சண்முகநதி, கூட்டுறவு சார்பதிவாளர் குமாரி மோகனா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சரவணன் மற்றம் மத்தியக் கூட்டுறவு வங்கி நிர்வாக குழு இயக்குநர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.




