நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மறைவிற்கு, நாமக்கல் கிழக்கு மாவட் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக பாஜ முன்னாள் தலைவரும், நாகாலாந்து கவர்னருமான இல. கணேசன் சென்னையில் காலமானார். இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
மாவட்ட பாஜக தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுப்பிரமணியம், பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துகுமார் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.




