Close
மார்ச் 7, 2026 4:25 மணி

புதுக்கோட்டை அலுவலர்    மன்றத்தில் கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான வினாடி வினாபோட்டி

புதுக்கோட்டை அலுவலர்    மன்றத்தில் கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையே யான வினாடி வினாபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில், கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான வினாடி வினாபோட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது

சிறப்பு விருந்தினர் விஜயகுமார் தொண்டைமான்  சுதந்திர தின தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் செயல் தலைவர் குமார், செயலாளர்  அம்பிகாபதி,  பொருளாளர் காமாட்சி, துணைத் தலைவர் முத்து கருப்பன், இணை செயலாளர் ரமேஷ்  செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பாலமுருகன், ஜான் பார்த்திபன், கண்ணன்  உறுப்பினர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்

புதுக்கோட்டை மவுண்ட் சியோன் பள்ளி மாணவி  ஷர்மிளா  இந்திய சுதந்திர தினம் பற்றி சிறப்பாக உரையாற்றினார். பின்னர் கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையிலான   வினாடி வினாபோட்டி நடைபெற்றது

மாமன்னர் கல்லூரி பேராசிரியர் கணேசன் போட்டியை நடத்தினார். இதில் முதல் பரிசை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி யோகராஜ் தாட்சாயினி ஆகிய மாணவர்களும், இரண்டாம் பரிசை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி ஜெயலெட்சுமி. காவியா ஆகிய மாணவிகளும், மூன்றாம் பரிசை ஸ்ரீ பாரதி கல்லூரி பஞ்சு நாச்சியார்,  மனிஷா ஆகிய மாணவிகளும், ஜெ.ஜெ கல்லூரி மாணவிகள் ரம்யா, அனிதா ஆகியோர் வெற்றி பெற்றனர்

வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top