Close
மார்ச் 7, 2026 2:34 மணி

நாமக்கல்லில் கிரேன் சரிந்து மின்கம்பியில் விழுந்ததால் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது

கிரேன் சரிந்து, மின்சார கம்பியில் விழுந்ததில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

நாமக்கல் நகரில், தனியார் மருத்துவமனையில் பெயின்ட் அடிக்கும் போது கிரேன் சரிந்து மின்சார கம்பியில் விழுந்ததில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிரேன் உரிமையாளர் உள்பட, 4 பேரை காவல்துறையினர் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் – திருச்சி மெயின் ரோட்டில், நாகராஜபுரத்தில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், பெயிண்டிங் வேலை நடைபெற்று வருகிறது. எருமப்பட்டியை சேர்ந்த தனபால் (60) என்பவர் பெயிண்டிங் கான்ட்ராக்ட் எடுத்துள்ளார்.

நேற்று முன்தினம், காலை, 7:30 மணிக்கு, பெயின்ட் அடிப்பதற்காக, எருமப்பட்டியை சேர்ந்த சுகுமார் (45), ஜோதி (44), நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்த முகேஸ்கண்ணன் (25), ஆகிய 3 பேரும், கிரேன் மூலம் மருத்துவமனையின் நான்காவது மாடிக்கு சென்றனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிரேன் டிரைவர் மைக்கேல் ஜீடே என்பவர் கிரேனை இயக்கினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கிரேன், 60 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே சரிந்து, அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. இதனால் கிரேன் தொட்டியில் இருந்த 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில், சுகுமார், ஜோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த முகேஷ்கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிரேன் டிரைவரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

அதையடுத்து, கிரேன் உரிமையாளர் ராஜமாணிக்கம் (40), டிரைவர் விசேந்தி மைக்கேல் ஜூட் (45), பெயின்டிங் கான்ட்ராக்டர் தனபால் (60), தனியார் மருத்துவமனை கேஷியர் சரண் (33) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top