பில்டர்ஸ் அசோசியேசஷன் ஆஃப் இந்திய நாமக்கல் மையத்தின் சார்பில், இலவச மருத்துவ முகாம் நாமக்கல் பில்டர்ஸ் மஹாலில் நடைபெற்றது. பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிஎஸ்டி. தென்னரசு தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.
திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ரத்தப்பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள். மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
நாமக்கல் கட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் இதுவரை நடைபெற்ற 10 இலவச மருத்துவ முகாம்களில் மொத்தம் 3500-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தி, அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு முகாமிலும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு, திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான மருத்துவக் கட்டணம் கட்டுநர் சங்கத்தின் மூலம் செலுத்தப்படுகிறது.
இந்த சேவையை நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பிஏஐ தலைவர் தென்னரசு கூறினார்.
தொடர்ந்து, பில்டர்ஸ் மஹாலில், நாமக்கல் பில்டர்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க செயலாளர் இளையராஜா வரவேற்றார். தலைவர் பிஎஸ்டி தென்னரசு தலைமை வகித்துப் பேசினார். சென்னை உளவியல் நிபுணர் டாக்டர் ரகுநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
பில்டர்ஸ் அசோசியேசன் நிறுவன தலைவர் கணேசன், நிர்வாகிகள் வெங்கடாசலம், நடராஜன், பாலசுப்ரமணியம், செந்தில், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.




