Close
மார்ச் 7, 2026 3:00 மணி

குறிஞ்சி நீட் அகாடமி மாணவர்கள் 9 பேர் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கை

நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமியில் பயின்று, அரசு ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., சேர்க்கை பெற்ற மாணவ மாணவிகளை, குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல் பாராட்டினார்.

நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமி மாணவ மாணவியர் 9 பேர், நீட் தேர்வில் வெற்றிபெற்று, தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ். சேர்க்கை பெற்றுள்ளனர்.

நாமக்கல், காவேட்டிப்பட்டியில் குறிஞ்சி கல்வி நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு குறிஞ்சி நீட் அகாடமி எனும் நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படுகிறது.

இந்த மையத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்பில் படித்து. வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள். நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமியில் பயிற்சி பெற்று 2025 நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர்.

இவர்களில் மஹாலட்சுமி, நிவேதா, பிரவின், பிரியங்கா, தாரணி, மோனிகா, காவியஸ்ரீ, சிவரஞ்சனி மற்றும் ரேணுகா ஆகிய 9 பேர், தமிழக அரசின் மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பட்டியலில் இடம்பெற்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாண்டு சேர்க்கை பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் சானை படைத்த மாணவ மாணவிகளுக்கு குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top