Close
மார்ச் 7, 2026 2:33 மணி

அரசு ஊக்கத்தொகையுடன் கனரக வாகன டிரைவிங் பயிற்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கீரம்பூரில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில், அரசு ஊக்கத்தொகையுடன் கனரக வாகனங்கள் டிரைவிங் பயிற்சியை, கலெக்டர் துர்காமூர்த்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தமிழக அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், அரசு ஊக்கத்தொகையுடன், கனரக வாகனங்கள் டிரைவிங் பயிற்சியை மாவட்ட ஆட்சியர்  துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகில், தனியார் டிரைவிங் பயிற்சி மையத்தில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கனரக வானங்கள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, நாமக்கல்லில் உள்ள தனியார் டிரைவிங் பயிற்சி மையத்தில், 37 நாட்கள் கொண்ட இலவச கனரக வாகன டிரைவிங் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு லைட் மற்றும் ஹெவி மோட்டார் வாகன டிரைவிங் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் போக்குரவத்து நிறுவனத்தில் நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சியின் முடிவில் அரசு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்.

மேலும், வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் பின்தங்கிய சமூகத்தினருக்கு திறன் ஊக்கத்தொகையாக குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் ரூ. 12,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. முதற்கட்டமாக 30 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி இலவச கனரக வானக டிரைவிங் பயிற்சியினை முடித்து, வேலைவாய்ப்பை பெற்ற பயனடையலாம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஆர்டிஓக்கம் பதுவைநாதன் (வடக்கு), முருகேசன் (தெற்கு), திறன் பயிற்சி உதவி இயக்குநர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top