Close
மார்ச் 7, 2026 1:41 மணி

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட பாஜக தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஒண்டி வீரன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பாஜக மூத்த நிர்வாகி வக்கீல் மனோகரன், மாவட்ட பொருளாளர் ரவி, பொதுச் செயலாளர் பிரபு, மாவட்ட செயலாளர் யுவராஜ், நகர பொதுச்செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட திரளான பாஜவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top