நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்தியின் பிறந்த நாள் விழா நாமக்கல் நேரு சிலை அருகில் நடைபெற்றது.
மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் தாஜ், தொகுதி சீரமைப்பு பொறுப்பாளர் சாந்திமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ராஜிவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வம், சரவணன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




