நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம் தேதி மாலை 3.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் துர்கமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, குறைகளை கேட்டறிவார். நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றுர் அவர்தம் வாரிசுகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.




