Close
மார்ச் 7, 2026 4:17 மணி

மாட வீதி சாலை பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிவடையும் அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாட வீதியில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே ரூ. 17 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1.7 கிலோமீட்டர் தொலைவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை திருவூடல் தெருவில் நவீன எந்திரங்களை கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அந்தப் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,

சாதாரண சிமெண்ட் சாலை போல் அல்லாமல் பல்வேறு நவீன எந்திரங்களை பயன்படுத்தி விமான நிலையங்களில் ஓடுதளங்களில் அமைக்கப்படும் அளவிற்கு தரம் வாய்ந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அமைக்கக்கூடிய இந்த சிமெண்ட் சாலை 100 ஆண்டுகளுக்கு தரமாக இருக்கும். மாடவீதியில் 2ஆம் கட்ட சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் முடிவடையும் என தெரிவித்தார் .

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது காலதாமதமாக நடைபெற்று வருவதற்கு காரணம் மாட வீதிகளில் வியாபாரிகள் மற்றும் வீடுகள் உள்ளதால் அவர்களுக்கு தேவையான குடிதண்ணீர் வசதி மற்றும் மின்சார தேவைகள் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்டவர்களை சரி செய்ய வேண்டி உள்ளதாகவும் அதே போன்று மாட வீதி முழுவதும் புதை தடை மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தரமாக முடிவடையும் என தெரிவித்தார் .

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணைச்செயலளார் ப்ரியா விஜயரங்கன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, கோட்ட பொறியாளர் ஞானவேல், உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு, உதவி பொறியாளர் சசி மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top