நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 54வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நூலகர் செல்வம் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் டாக்டர் மோகன் தலைமை வகித்து, நாமக்கல் கவிஞரின் பாடல்கள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்று சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
நாமக்கல் வள்ளலார் சன்மார்க்க சங்க பொறுப்பாளர் சபாபதி, கவிஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஜேசீஸ் சங்க முன்னாள் தலைவர் நாகரத்தினம், இன்ஜினியர் மணி, நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கண்ணன், செல்வம் மற்றும் புரவலர்கள் ராமு, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுப்பிரமணி, துரைசாமி, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கவிஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முடிவில் நம்மாழ்வார் நடுநிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.




