Close
மார்ச் 7, 2026 2:40 மணி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியர் திருமுருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலக இசைவு தீர்வாயத்துக்கும், அங்கிருந்த ராஜேஸ்கண்ணா, டாஸ்மாக் உதவி மேலாளராகவும், அங்கிருந்த ராஜ்குமார், சேந்தமங்கலம் தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேந்தமங்கலம் தனி வட்டாட்சியர் சரவணகுமார், குமாரபாளையம் தாலுகா தனி வட்டாட்சியராகவும், குமாரபாளையம் தாலுகா தனி வட்டாட்சியர் மாதேஸ்வரி, திருச்செங்கோடு தாலுகா தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

திருச்செங்கோடு தாலுகா தனி வட்டாட்சியர் கோவிந்தசாமி, ப.வேலூர் வட்டாட்சியராகவும், அங்கிருந்த முத்துக்குமார், நாமக்கல் தாலுகா தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய பிரகாஷ், குமாரபாளையம் வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த தமிழரசி, கலால் மேற்பார்வை அலுவலராகவும், அங்கு பணிபுரிந்த சசிகலா, நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டனர்.

நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி வட்டாட்சியர் சண்முகவேலு, மோகனூர் தாலுகா தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராகவும் (பொது), அங்கு பணிபுரிந்த மணிகண்டன், முத்திரைத் தாள் கட்டண தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும், கோட்டக் கலால் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில், பேரிடர் மேலாண் தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய அரவிந்தன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சீனிவாசன், கோட்ட கலால் அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top