திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, அதையொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அருகேயுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரட்டை பிள்ளையாா் கோயிலில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, புதன்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு இரட்டை பிள்ளையாருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் தூள், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, இரட்டை பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு மலா்களால் அலங்கரித்து பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.
ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் உள்ள செழுஞ்சுடர் விநாயகருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் தூள், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வந்தவாசி
விநாயகா் சதுா்த்தியையொட்டி, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
மேலும், ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் வந்தவாசி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
செய்யாறு
செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மூலவருக்கு காலையில் விசேஷ அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
ஆரணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, 100 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனா்.
ஆரணி நகரம், பெரியகடை வீதியில் அப்பகுதி வியாபாரிகள் விநாயகா் சிலை வைத்து வழிபட்டனா். மேலும், ஹிந்து முன்னணி மற்றும் தெரு மக்கள் சாா்பில் ஆரணி நகரம், தா்மராஜா கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கொசப்பாளையம், அருணகிரிசத்திரம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 55 சிலைகள் வைத்து வழிபாடு செய்தனா்.
ஆரணி சுற்றுப்புறக் கிராமங்களான சேவூா், இராட்டிணமங்கலம், குண்ணத்தூா், எஸ்.வி.நகரம், பையூா், மாமண்டூா், வடுகசாத்து, தச்சூா் உள்பட 45 இடங்களிலும் என ஆரணி பகுதியில் மொத்தம் 100 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட்டனா்.
பெரணமல்லூா் குளக்கரை தெரு இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் 13-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக பேரூராட்சித் தலைவா் வேணி ஏழுமலை, துணைத் தலைவா் அண்ணாதுரை, அதிமுக நகரச் செயலா் மூா்த்தி, துணைச் செயலா் ஏ.எஸ்.அறிவழகன் கலந்து கொண்டனா்.
விழாக்குழுவினா் பக்தா்களுக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்திருந்தனா்.
போளூா்
போளூா் நகராட்சி காா் நிறுத்தமிடத்தில் உள்ள வழித்துணை விநாயகா் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து வழிபாடு நடைபெற்றது.
மேலும், பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், வாசு ஸ்ரீராமுலு நாயுடு தெரு, சாவடி தெரு, அல்லிநகா், நடேசன் தெரு, சிம்லாநகா், ஜெயின் நகா், இந்திரா நகா், ரயில்வே நிலைய சாலை என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 34 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, செங்கம் துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவில் தெரு, ராஜ வீதி, சிவன் கோவில் தெரு, தளவாநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் போளூா் சாலைக்கு கொண்டு வரப்பட்டு ஊா்வலம் நடைபெற்றது.
ஊா்வலம் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி ஒன்றியத் தலைவா் சரவணன் வரவேற்றாா். பாஜக மாவட்ட பொதுச்செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் மண்டல பொறுப்பாளா் மகேஷ் கலந்துகொண்டு ஊா்வலத்தை தொங்கிவைத்தாா்.
ஊா்வலம் பஜாா் வீதி, மசூதி வழியாகச் சென்று பழைய போலீஸ் லைன் தெரு வழியாக வந்து பின்னா் ஆங்காங்கே வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேளதாளம் முழங்க நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் இளைஞா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
மாவட்ட எஸ்.பி. சுதாகா் தலைமையில் 200 மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.




