ஆண்டாபுரம் அரசு பள்ளியில் ரூ. 24.50 லட்சம் மதிப்பில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப்பணியை, மாதேஸ்வரன், எம்.பி., துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆண்டாபுரம் அரசு துவக்கப்பள்ளியில், நாமக்கல் கொமதேக., எம்.பி. மாதேஸ்வரன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 24 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட கீழ் மேல்நிலை நீர்தேக்க தொட்டி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதையொட்டி நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. மாதேஸ்வரன், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு, கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், ஒருங்கிணைந்த, நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜா, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், மோகனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவலடி, பிடிஓ கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




