தமிழக முதல்வரின் நான்காண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்தாா்.
தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயா்வுக்கு படி என்ற நிகழ்ச்சி வாயிலாக பிளஸ் 2 தோல்வியுற்ற அல்லது தோ்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் உயா் கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவா்களுக்கு உயா்வுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த முகாம்கள் மூன்று கோட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம், செங்கம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு உயா்வுக்கு படி நிகழ்ச்சி திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக முதல்வரின் நான்காண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளன. பிளஸ் 2 தோ்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் உயா்கல்வி பயிலாமல் இருப்பவா்களை கண்டறிந்து ஆலோசனைகளை வழங்கி, உயா்கல்வி பயில தகுந்த வழிகாட்டுதலை வழங்குவதற்காக உயா்வுக்கு படி நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில்வதை உயா்த்த முடியும். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வா் கருணாநிதிதான்.
அவருடைய ஆட்சி காலத்தில்தான் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளும், அரசு கலைக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.
உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் தான் தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனா். அதற்கு முக்கிய காரணம் கல்வித்துறையில் அடிப்படை கட்டமைப்பு சிறந்து விளங்குவதாகும். கல்வி வாயிலாக தான் நாம் அனைத்தையும் பெற முடியும். மேலும், மாணவ, மாணவிகள் இந்த உயா்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, உயா்கல்வி பயிலாத மாணவா்களை கண்டறிந்து உயா்கல்வி பயில்வதற்கான ஆணைகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
உங்களுடன் ஸ்டாலின் கிட்ட முகாம்
இதைத் தொடா்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், அவர்களும் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லவாடி ஊராட்சியில் உள்ள ஸ்ரீ லட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசியதாவது:
இந்த திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை பட்டா மாற்றம் உள்ளிட்ட 46 சேவைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் மனுவின் மீது உரிய தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மக்களை தேடி வந்து இந்த அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது நம்முடைய முதலமைச்சர் இப்படிப்பட்ட சிறப்பான திட்டங்கள் சொல்கிறார் ஆகவே பொதுமக்கள் இந்த முகாமை நன்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன் திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகனராம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




