Close
மார்ச் 7, 2026 4:17 மணி

நாமக்கல் மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல் மாநகராட்சியில், மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி, மாநகர பசுமை இயக்கம் (அர்பன் கிரீனிங் கேம்பைன்) சார்பில், மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள, பூங்காக்கள், நீர்நிலைகளில், பள்ளி மற்றும் பொது இடங்களில் பெருமளவில் மரக்கன்றுகள் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நாமக்கல் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி முன்னிலை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், செயற்பொறியாளர் கலைவாணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

வார்டு எண் 22ல் உள்ள காவேட்டிப்பட்டி மகரிஷி நகர் பூங்காவில் 50 மரக்கன்றுகளும், திருச்சி ரோட்டில் உள்ள நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலை கல்லூரியில் 40 மரக்கன்றுகளும், சேலம் ரோட்டில் சாலையின் மையப் பகுதியில் 30 மரக்கன்றுகளும், முதலைப்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் 40 மரக்கன்றுகள் என ஒரே நாளில் மொத்தம் 160 மரக்கன்றுகள் நாமக்கல் மாநகராட்சி பகுதியில் நடப்பட்டன.

மாநகராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கர், ஜான் ராஜா, நகர அமைப்பு ஆய்வாளர்கள் சீனிவாசன், ராஜ்குமார், களப்பணி உதவியாளர் சபரிநாதன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top