நாமக்கல்லில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவும், வாழ்வதாரத்தை காக்கவும், குறைகளை கேட்டு தீர்வு காணவும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டில் நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு, மாநகர மேயர் கலாநிதி தலைமை வகித்தார். கமிஷனர் சிவகுமார், துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தனார்.
தொடர்ந்து மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேற்கு நகர திமுக செயலாளர் சிவக்குமார், தாசில்தார் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




