Close
மார்ச் 7, 2026 12:59 மணி

நாமக்கல்லில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: டென்னிஸ் போட்டியில் கலெக்டர் பங்கேற்பு

முதலமைச்சர் கோப்பை அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப்போட்டியை, கலெக்டர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்து, டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில், அரசு அலுவலர்கள் பிரிவு டென்னிஸ் போட்டியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்துகொண்டு விளையாடினார்.

இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள், மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் 178 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2ஆம் பரிசாக ரூ. 75,000, 3ஆம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75,000, 2ஆம் பரிசாக தலா ரூ.50,000ம், 3ஆம் பரிசாக தலா ரூ. 25,000 வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், கடந்த ஆக. 26 முதல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். மேலும், அவர் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், சிஇஓ மகேஸ்வரி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் கோகிலா உட்பட பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என ஆண்கள் பிரிவில் 378 பேரும், பெண்கள் பிரிவில் 176 பேரும் என, மொத்தம் 554 பேர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top