திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் இளைஞர்களும் மாணவர்களும் சிறந்த முறையில் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு உபகரண பொருட்களை சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி முருகையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசபாக்கம் எம்எல்ஏ .சரவணன் விளையாட்டு உபகரண பொருட்களை வழங்கி பேசியதாவது,
விளையாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் மூலம் விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கி அதன் மூலம் மாணவர்கள் கல்வியில் எந்த அளவிற்கு சாதிக்கிறார்களோ அதே அளவிற்கு விளையாட்டிலும் சாதிக்க வேண்டும்
அதற்கு தேவையான 32 வகையான விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கி, அதன் மூலம் விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும், விளையாட்டு போட்டிகளில் தமிழகம் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் கலைஞரின் விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் மூலம் மாணவர்கள் விளையாட்டிலும் சாதித்து வருகிறார்கள். அதேபோல் நீங்களும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் விஜய், ஓவர்சீஸ் ஆறுமுகம், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நிஷார், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த நவாப்பாளையம் ஊராட்சியில் உள்ளசமுதாய கூடத்தில் கெங்கவாரம், கிடாம்பாளையம், ஆகிய இரண்டு கிராமங்களில் இணைத்து உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிவா, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், வட்டாட்சியர் தேன்மொழி, வட்ட வழங்கல் அலுவலர் வடிவேல், தனி வட்டாட்சியர் லலிதா, மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




