திருச்செங்கோடு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருச்செங்கோடு தாலுகா, கருமனூர், செம்பாம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த சண்முகம், அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் கடந்த 22.5.2025 அன்று நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
அவர்களின் வாரிசுதார்களான தமிழ்மணி, ராஜேஸ்வரி, வசந்தபிரியா, ஹரி பிரசாத் ஆகியோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் மற்றும் விபத்தில் காயமடைந்த ராஜேஸ்வரிக்கு ரூ. 50 ஆயிரம் தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் முன்லை வகித்தார். மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் வாரிசுகளுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.




