Close
மார்ச் 7, 2026 4:56 மணி

எருமப்பட்டி, வளையப்பட்டி பகுதிகளில் வரும் 9ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

எருமப்பட்டி மற்றும் வளையப்பட்டி பகுதிகளில் வரும் 9ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் இதனால், எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, காவரக்காரப்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வரும் 9ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் இதனால், வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், அரூர்மேடு உள்ளிட்ட பகுதிகளில், வரும் 9ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top