Close
மார்ச் 7, 2026 11:36 காலை

டிராக்டரை ரிவர்ஸ் எடுத்தபோது விபத்து: 3 வயது சிறுமி உயிரிழப்பு

விபத்து -கோப்பு படம்

நாமக்கல் நகரில் டிராக்டரை ரிவர்ஸ் எடுத்தபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த, 3 வயது சிறுமி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி, நரிக்குறவர் புதுகாலனியை சேர்ந்தவர் வேலன். இவரது மனைவி நந்தினி. தம்பதியருக்கு, நிஷாந்தினி (10), சிவசேனா (8) என 2 மகள்களும், கவின் (3) என்ற மகனும் இருந்தனர்.

சிறுமி சிவசேனா, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், 3-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி பக்கத்து தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் உள்ள மரத்தடியில் சிவசேனா விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை விஜய் (26) என்பவர் ஸ்டார்ட் செய்து, ரிவர்சில் ஒட்டி வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சிவசேனா மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த சிவசேனாவை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சிவசேனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி மீது மோதிவிட்டு, தப்பிச்சென்ற டிராக்டர் டிரைவர் விஜய்யை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top