நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய கண் தான இருவார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் 40-வது தேசிய கண் தான இருவார விழா நடைபெற்றது. அதன் நிறைவு விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, கண்தானம் செய்த திருச்செங்கோடு அருகே உள்ள ராமாபுரம் பாவடி தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் குடும்பத்தினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும், கண் தானம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




