கள்ளுக்கான தடையை நீக்க வலியுறத்தி நாமக்கல் அருகே, கோனூர் கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை அரசு நீக்க வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் கள் இறக்க அனுமதியளிக்கும் கட்சிக்கு சங்கம் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்படும். இல்லையெனில் சட்டசபை தேர்தலில் சங்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து தென்னை மர கள்ளை, விவசாயிகள் சங்கத்தினர் ஒரு லிட்டர் ரூ. 120 என்ற விலையில் விற்பனை செய்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி, இளம் விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.




