திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் சாா்பில் 850 மனுக்கள் அளிப்பட்டன. இதில், 12 பேருக்கு உடனடி நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி வளாகத்தில் 7,10,14,15 ஆகிய வாா்டுகளுக்கான முதல்வரின் முகவரி துறை சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். ஆரணி எம்.பி. தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஜோதி, திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் மோகனவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி ஆணையாளா் கீதா வரவேற்றாா்.
முகாமைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பேசுவையில்,
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் அரசு துறை சார்ந்த நலத்திட்டங்கள், பல்வேறு கட்டமைப்புகள் உள்ளிட்ட விவரங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கிராமத்தில், வட்டத்தில் எந்த அளவிற்கு சென்றடைந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும், அது மக்களிடையே சென்றடைய இடைவெளி இருந்தால் அதை சரி செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும்.
அதனடிப்படையில் காலை முதல் இந்த கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கள ஆய்வு செய்துள்ளார்கள். இந்த கள ஆய்வில் சில தரவுகளை கண்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களின் வாயிலாக நிவர்த்தி செய்து பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு ஆட்சியர் கூறினார்.
தொடர்ந்து பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து பெட்டகம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி என பல்வேறு துறைகளில் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் வெம்பாக்கம் வட்டம் தென்னம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும் எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகள் குறித்தும் மாணவ மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், திட்ட இயக்குனர் தளபதி, இணை இயக்குனர் கண்ணகி, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.




