Close
மார்ச் 7, 2026 11:31 காலை

நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளரின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரின், டில்லியில் மத்திய எஃகு மற்றும் தொழில் துறை அமைச்சர் குமாரசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, எம்.பி., மாதேஸ்வரன், மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமியை, டெல்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

நாமக்கல் கொமதேக., எம்.பி., மாதேஸ்வரன், டில்லியில் மத்திய எஃகு மற்றும் கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசுக்கு சொந்தமான பாய்லர் தொழிற்சாலை (பெல்) போக்குரவத்து வாகனங்களுக்கு டெண்டர் கோரும்போது, மண்டலம் வாரியாக இல்லாமல், பழைய முறைப்படி மாநிலங்கள் வாரியாக வழங்கக்கூடிய வாடகைக்கட்டணத்தை கி.மீ., முறையில் கணக்கிட்டு வழங்க வேண்டும்.

நாமக்கல் ட்ரெய்லர் லாரி சங்கத்தின் மூலம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 70 முதல் 80 சதவீதம் வரை, பெல் தொழிற்சாலைகளில் சரக்குகளை கையாண்டு, பெல் நிறுவனத்திற்கு நல்ல முறையில் சேவை செய்து வருகிறோம். அதை கருத்தில்கொண்டு, வரும் ஆண்டுகளிலும், சரக்குகளை கையாள ஏதுவாக பணிகள் மற்றும் டெண்டர்கள் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

காண்ட்ராக்ட் எடுக்கும்போது, ஆன்லைன் மூலம் திறந்த வழி ஒப்பந்தமாக அமைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடைபெறும் டெண்டரில் பதிவு பெற்ற காண்ட்ராக்டர் மட்டுமல்லாமல் லாரி உரிமையாளர்களும் கலந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

பெல் தொழிற்சாலையில் இருந்து சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனம் இறக்கும் இடத்தில், 24 மணி நேரத்திற்குள் சரக்குளை இறக்கிவிட வேண்டும். தவறும் பட்சத்தில், ஒரு நாளைக்கு வண்டிக்கு ‘ஹால்ட்டிங்’ வாடகை கட்டணமாக ரூ. 4,000 வீதம் வழங்க வேண்டும்.

விபத்தில் சிக்கும் லாரி டிரைவர் உயிரிழந்தால், 60 வயது வரை மாத சம்பளமாக ரூ. 15,000 வழங்குவதை, ரூ. 40,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ட்ரெய்லர் லாரிகளை மல்டி ஆக்சில் என்ற முறையை மாற்றி, பழைய முறையிலேயே ஆர்டிக்குலேட்டட் வெஹிக்கில் என குறிப்பிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top