Close
மார்ச் 7, 2026 2:34 மணி

சமுதாய வளப் பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாடு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (சிஎம்டிசி) என்ற துணை அமைப்பு மாவட்ட அளவில் செயல்படும் உயர்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வமைப்பு, சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் ஒரு உயர்நிலை மக்கள் அமைப்பாகும்.

இந்த சேவைகளை வழங்கிட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த சிறப்பாக செயற்பாட்டில் உள்ள 5 வருட அனுபவம் வாய்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள், சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர்கள் , சமுதாய வள பயிற்றுநர்கள், விவசாயம், விவசாயம் சாரா தொழில்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், தொழிற்சார் சமுதாய வள பயிற்றுநர்கள், வட்டார வள பயிற்றுநர்கள், ஒத்த தொழில் குழு உறுப்பினர்கள், உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களாகவும் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்து பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்

மேலும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த தெரிந்தவராகவும், சமுதாய வளப்பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பும் அவசியம்.

அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவர்களாகவும் தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணிபுரிபவராகவோ இருக்கக் கூடாது.

சமுதாய வளப் பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு தர மதிப்பீட்டின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.350 முதல் ரூ.750 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்திலோ அல்லது வெப்சைட்டில் இருந்து டவுன் லோடு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 17ம் தேதி மாலை 5 மணிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் ஒப்படைக்க வேண்டும்,

மேலும் விவரங்களுக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top