நாமக்கல்லில் கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் உத்தரவுப்படி, இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் கூட்டுறவுத்துறை பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல இணைப்பதிவாளர் அருளரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கூட்டுறவுத்துறையில் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க பணியாளர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளைகளை கேட்டறிந்தார்.
கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 2 மாதஙகளில் தீர்வு செய்யப்படும். நாமக்கல் சரக துணைப் பதிவாளர் ஜேசுதாஸ், பணியாளர் அலுவலர் செல்வி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




