நாமக்கல்லில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 117வது நாள் விழா நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலத்ததினார்கள்.
தொடர்ந்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், ஓட்டுச்சாவடி வாரியாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாக்கு சாவடி வாரியாக பூத் ஏஜெண்டுகளும் கட்சி நிர்வாகிகளும், தமிழ்நாட்டின் மண் -மொழி -மானம் காக்க அண்ணா பிறந்தநாளில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என, ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழியை ஏற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், மாநகர மேயர் கலாநதி, துணை மேயர் பூபதி, மாநில திமுக நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், ராணி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார் உள்ளிட்ட திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




