Close
மார்ச் 7, 2026 1:42 மணி

நாமக்கல்லில் 850 மகளிர் குழுவினருக்கு வங்கி கடன் உதவி: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, வங்கி கடன் உதவியை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 850 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 79.96 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,500 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி தொடங்கிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து, நாமக்கல்லில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதி திராவிலர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாநில ஊரக நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 850 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 79.68 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு உட்பட பல்வேறு கடனுதவிகள் மற்றும் 1500 மகளிர் சுய உதவிக்குழுஉறுப்பினர்களுக்குஅடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் மூலம் மகளிர் குழுவினர் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனி கவனம் செலுத்தப்பட்டு, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 775 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.76.96 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. 159 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 1500 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இன்று வழங்கப்படும் மகளிர் சுய உதவிக்குழு அடையாளஅட்டை வைத்திருப்பவர்கள் 25 கிலோ வரை சுய உதவிக்குழு பொருட்களை நகரப் பேருந்து மற்றும் வெளியூர் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.

கோ-ஆப்டெக்ஸ் துறையில் பொருட்கள் வாங்கும்பொழுது ஏற்கனவே உள்ள தள்ளுபடிகளுக்கு மேல், 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்திற்கு இந்த அடையாள அட்டை முதன்மை சான்றாக கருதப்படும். அடையாள அட்டைகளைக் கொண்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் உற்பத்தித் துறையால் வழங்கப்படும் பல்வேறு கடன்களைப் பெற முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, ஆவின் தயாரிப்புகளில் சலுகை வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களிலும், 10 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.

நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top