நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாட்டப்பட்டது.
கல்லூரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறைத்தலைவர் சுஜாதா வரவேற்றார்.
விழாவில், கல்லூரி மாணவியர், டயாபட்டிஸ், கார்டியோ வாஸ்குளர் டிஸ்ஆர்டர், புரோட்டின் மற்றும் இரும்பு சத்துக்களின் முக்கியத்துவம், அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்துமிக்க திண்பண்டங்களாக துரித வகை உணவுகளான மோமோஸ், நூடுல்ஸ், பர்கர், பப்ரவுனிஸ் போன்றவற்றைப் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
விழாவை முன்னிட்டு, கல்லூரிகளுக்கு இடையேயான, டிரஷர் ஹண்ட், லோகோ வரைதல், நியூட்ரி க்ராப்ட்ஸ், மைம்ஷோ மற்றும் உணவுக் காட்சிப்படுத்துதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




