Close
மார்ச் 7, 2026 5:47 மணி

புதிய உயர்மட்ட பாலங்கள் திறந்து வைத்த அமைச்சர் வேலு

புதிய உயர்மட்ட பாலங்கள் திறந்து வைத்த அமைச்சர் வேலு

நெடுஞ்சாலைத்துறை சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கேவெறையூர் தண்டரை சாலையில் புதிய உயர்மட்ட பாலம் மற்றும் டி.வளசை-சு. வாளவெட்டி கிராமங்களை இணைக்கும் புதிய உயர்மட்ட பாலம் என ரூ.12.87 கோடி மதிப்பீட்டில் 2 புதிய உயர்மட்ட பாலங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ர் இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புரங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டும், பள்ளி மாணவ மாணவிகள் எவ்வித சிரமமுமின்றி நீர்நிலைகளை கடந்து தங்கள் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பயில வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாடு முழுவதும் கிராமபுறங்களில் நீர்நிலைகளில் தரைபாலங்கள் அனைத்தையும் உயர்மட்ட பாலங்களாக மாற்றவேண்டும் என்று ஆணையிட்டதின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமுள்ள 1281 தரை பாலங்களில் 1191 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்பட்டுள்ளன.

மேலும் எஞ்சியுள்ள தரைபாலங்கள் அனைத்தையும் உயர்மட்ட பாலங்களாக நடப்பாண்டுக்குள் கட்டிமுடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற பாலப்புரட்சியில் செயல் திட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் -தண்டரை கிராமத்தை இணைக்கும் வகையில் ரூ.6.17 கோடி மதிப்பீட்டிலே கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மொத்த நீளத்தில் 60 மீட்டரும். ஓடுதளத்தின் அகலத்தில், 7.50 மீட்டர் (இரு வழித்தடம்) கொண்ட பாலமாகும். மேலும் இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்ததன் மூலமாக அருகாமையில் உள்ள வெரையூர், தண்டரை, அண்டம்பள்ளம், தளவாய்குளம். சாணிப்பூண்டி, வைப்பூர், மதுராம்பட்டு, ஆனானந்தல் ஆண்டியாபாளையம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள்.

அதே போன்று துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே டி.வலசை- சுவாளவெட்டி கிராமத்தை இணைக்கின்ற வகையில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு இன்றைக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட உயர்மட்ட பாலாமனது அருகாமை கிராமங்களான வெரையூர், தண்டரை, அண்டம்பள்ளம், தளவாய்குளம். சாணிப்பூண்டி, வைப்பூர். மதுராம்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என்பதை மகிழ்யோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சரின் நான்காண்டு கால ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் 145 கிலோ மீட்டர் தொலைவு அளவிற்கான சாலைகளை சீரமைத்திருக்கிறோம்.

ரூ.41 கோடி மதிப்பீட்டில் ஊரக சாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.19 கோடி மதிப்பீட்டில் 3 தரைபாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்பட்டுள்ளன. மேலும் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக 4 பாலங்கள் நடப்பு நிதியாண்டிலே கட்டியுள்ளோம் என்பதை இந்தநேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் தெரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்ட துணைச்செயலாளர் ப்ரியா விஜயரங்கன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் செந்தில், கண்காணிப்பு பொறியாளர் பரந்தாமன் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top