நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், பாரத பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராத்த தான முகாம் நடைபெற்றது.
மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமை வகித்தார், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்விலாஸ் பிரபு முன்னிலை வகித்தார். திரளான பாஜவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் அருகே, பாப்பிநாய்க்கன்பட்டியில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மாவட்ட பாஜக தலைவர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விழாவில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாமக்கல் நகர தலைவர் தினேஷ்குமார், பாஜக பிரமுகர் வேல்ராஜ் பெரியசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




