Close
மார்ச் 7, 2026 4:17 மணி

நாமக்கல் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை நிகழ்ச்சி துவக்க விழா

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணியை, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி, நாமக்கல் மாநகராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி துவக்க விழா, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசராகவன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முக்கிய வீதிகளின் வழியாக நகரின் தூய்மையை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. தூய்மையே சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.

தொடர்ந்து, பல்வேறு வகையான தூய்மை விழிப்புணர்வுகள் மற்றும் தூய்மை நிகழ்வுகள், தூய்மை செயல்பாடுகள் ஆகியவைகள் நடைபெறும்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜான் ராஜா, சுப்ரமணி, பாஸ்கரன் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ராமு நாட்டு, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பாவையரசி, பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுமதி, உடற்கல்வி ஆசிரியர்கள் செல்லம்மாள், சரவணன், அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top