Close
மார்ச் 7, 2026 1:42 மணி

நாமக்கல்லில் ராமாயண தொடர் சொற்பொழிவு: 22ம் தேதி சீதாராமர் பட்டாபிஷேக விழா

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்று வரும் ராமாயணம் தொடர் சொற்பொழிவில் 21ம் தேதி சீதாராமர் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் பெருகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் கடந்த 13ம் தேதி முதல் ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உபன்யாசம் நடைபெற்று வருகிறது.

தினசரி காலை 7 மணி முதல் 12 மணி வரை பாராயணமும், மாலை 6.30 மணி முதல் இரவ 8.30 மணி வரை ராமாயணம் சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது. சோளிங்கர் சந்தானகிருஷ்ணன் உபன்யாசம் மற்றும் சொற்பொழிவு நடத்தி வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக தினசரி ஸ்ரீ ராமர் அவதாரம், சீதை திருக்கல்யாணம், கைகேயி வரங்கள், ராமரின் பாதுகைகள் பட்டாபிசேகம், ஜடாயு மோட்சம், சுக்ரீவன் பட்டாபிசேகம், சுந்தரகாண்டம், விபீஷணர் சரணாகதி உள்ளிட்ட தலைப்புகளில் சொற்பொழிவு நடைபெற்றது.

21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ஸ்ரீ சீதாராம பட்டாபிஷேக விழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டை பொக்கிஷம் நரசிம்மன் பட்டாச்சார்யார் மற்றும் மோகன் பட்டாச்சார்யார், வெங்கடேசன் பட்டாச்சார்யார் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top